வவுனியா நொச்சிமோட்டைப் பகுதியில் பெண் ஒருவருடன் அநாகரிகமாக நடக்க முற்பட்ட நபர் ஒருவர் மக்களால் பிடிக்கப்பட்டு நையப்புடைக்கப்பட்ட சம்பவத்தினால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
நொச்சிமோட்டைப் பகுதியில் உள்ள வீட்டிற்கு முன்பாக குறித்த நபர் அநாகரிகமான முறையில் நடந்ததுடன் தன்னை அழைத்ததாக பாதிக்கப்பட்ட பெண் தெரிவித்திருக்கின்றார்.
அதனை அடுத்து அங்கு திரண்ட ஊர் மக்கள் குறித்த நபரை பிடித்து நையப்புடைத்ததுடன் பொலிஸாருக்கும் அறிவித்தனர்.
அங்கு சென்ற பொலிஸார் விசாரணை நடத்த முற்பட்டபோது தான் இராணுவத்தைச் சேர்ந்தவர் என்று அவர் தெரிவித்திருக்கின்றார்.
பொலிஸார் குறித்த நபரை முச்சக்கரவண்டி ஒன்றில் ஏற்றி பொலிஸ் நிலையத்துக்கு கொண்டு சென்றுள்ளனர்.